ஆப்கானிஸ்தானில் 4.0 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம்.! அச்சத்தில் மக்கள்.! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத்தில் 4.0 ரிக்டர் அளவில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத்தில் இருந்து தென்கிழக்கே 82 கிலோமீட்டர் தொலைவிலும், 10 கிலோமீட்டர் ஆழத்திலும் மையம் கொண்டிருந்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 36.53 அட்சரேகையிலும், 71.15 தீர்க்கரேகையிலும், ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் அல்லது பொருள் சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இதற்கு முன்பாக ஆப்கானிஸ்தானில் நேற்று அதிகாலை 4.1 ரிக்டர் அளவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது மக்களிடையே அச்சத்தை  ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Earthquake of 4 magnitude hits Afghanistan


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->