குளியறையின் கதவை திறக்கையில் கருப்பு கலரில் நெளிந்த பாம்பு.. பதறிப்போன குடும்பத்தினர்..! - Seithipunal
Seithipunal


ஐக்கிய அரபு நாடுகளில் பிற நாடுகளை போல அல்லாமல் பெரும்பாலும் பாலைவனத்தால் சூழப்பட்ட நாடுகள் ஆகும். இதனால் இங்குள்ள பகுதிகளில் விஷ பூச்சிகள் மற்றும் பாம்புகள் போன்றவற்றை காண இயலாது. பாலைவன பகுதியில் இருக்கும் சில பாம்புகள் மட்டுமே இங்கு இருக்கும். 

இந்நிலையில், துபாயில் உள்ள அல் புர்ஜான் பகுதியில் குடும்பத்துடன் இந்தியாவை சார்ந்த சுனில் சவுதாரி வசித்து வந்துள்ளார். இவரது வீட்டில் தோட்டம் அமைக்க, வெளியிடத்தில் இருந்து மணலை கொண்டு வந்துள்ளார். 

இதன்போது வீட்டில் உள்ள குளியறையில் கருப்பு நிறத்தில் பாம்பு இருந்துள்ளது. இதனைக்கண்ட குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகிய நிலையில், அந்த பாம்பு விஷம் அற்றது என்று உள்ளூர் வாசி தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து அவரது உதவியுடன் பாம்பை பிடித்து குடியிருப்பு பகுதிக்கு அப்பால் கொண்டு சென்று விட்டுள்ளனர். இந்த பாம்பு க்ருய்து துபாய் பூச்சிக்கட்டுப்பாட்டு நிறுவன நிபுணர் தினேஷ் ராமச்சந்திரன் தெரிவிக்கையில், " இந்த கருப்பு நிற பாம்பு குருட்டு பாம்பு என்று அழைக்கப்படும். இது புழு வகையை சார்ந்தது. 

மண்ணிற்கு அடியே அல்லது செடி கொடிகளில் காணப்படும் பாம்பானது மனிதர்களுக்கு எவ்விதமான தீங்கையும் ஏற்படுத்தாது. இந்த பாம்புகளை கண்டால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dubai Blind Snake


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->