உமிழ்நீரை வைத்து கொரோனா சோதனை... ஆய்வில் வெளியான புதிய தகவல்.!
CORONA VIRUS TEST SPLIT
உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் சோதனைகள் மற்றும் தடுப்பூசி சோதனைகள் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுப்படி, உமிழ்நீரை வைத்து கொரோனாவை கண்டறியலாம் என்று ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
உமிழ்நீரின் மாதிரியை சோதனை செய்தால் அறிகுறியற்ற கொரோனா வைரஸ் தொற்றினை கண்டறியும் வழிமுறைகள் இருப்பதாகவும், இதன் மூலமகள் விரைவான மற்றும் பயனுள்ள அணுகுமுறையை வழங்க கூடும் என்றும் ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜப்பானில் மேற்கொள்ளப்பட்ட இத்தகையை ஆய்வில் 2000 பேரின் உமிழிநீர் மாதிரி சோதனை செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலமாக சுமார் 80 விழுக்காடு பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் ஆய்வின் முடிவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிகுறியுடன் இருக்கும் நோயாளிகளுக்கு செய்யப்படும் பி.சி.ஆர் சோதனையை விட, இது மிகவும் விரைவாக கண்டறிய உதவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil