உமிழ்நீரை வைத்து கொரோனா சோதனை... ஆய்வில் வெளியான புதிய தகவல்.! - Seithipunal
Seithipunal


உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் சோதனைகள் மற்றும் தடுப்பூசி சோதனைகள் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுப்படி, உமிழ்நீரை வைத்து கொரோனாவை கண்டறியலாம் என்று ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. 

உமிழ்நீரின் மாதிரியை சோதனை செய்தால் அறிகுறியற்ற கொரோனா வைரஸ் தொற்றினை கண்டறியும் வழிமுறைகள் இருப்பதாகவும், இதன் மூலமகள் விரைவான மற்றும் பயனுள்ள அணுகுமுறையை வழங்க கூடும் என்றும் ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜப்பானில் மேற்கொள்ளப்பட்ட இத்தகையை ஆய்வில் 2000 பேரின் உமிழிநீர் மாதிரி சோதனை செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலமாக சுமார் 80 விழுக்காடு பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் ஆய்வின் முடிவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிகுறியுடன் இருக்கும் நோயாளிகளுக்கு செய்யப்படும் பி.சி.ஆர் சோதனையை விட, இது மிகவும் விரைவாக கண்டறிய உதவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CORONA VIRUS TEST SPLIT


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->