ஆஸ்திரேலியா : புத்தக் கோவிலில் திடீர் தீ விபத்து.!  - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள தென்கிழக்கு மாகாணம் விக்டோரியாவின் தலைநகரான மெல்போர்னில் புத்த கோவில் ஒன்று உள்ளது. இந்தக் கோவில் கடந்த 32 ஆண்டுகளுக்கு முன்பு அடுக்குமாடிகளுடன் கட்டப்பட்டது. இது உள்ளூர் புத்த சமூகத்தினர் இடையே ஒரு பிரபலமான வழிபாட்டு தலமாக இருந்து வருகிறது. 

இந்த நிலையில், இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பிடித்தது. இந்தத் தீ நொடி நேரத்தில் சர சரவென்று அடுத்தடுத்தக் கட்டடங்களுக்கும் பரவியது. இதைப்பார்த்த பொதுமக்கள், அதிர்ச்சியடைந்து தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர்.

அந்த தகவலின் படி,சுமார்  எண்பதுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு அவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் முழுவதுமாக ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்தவிதமான உயிரிழப்போ அல்லது காயமோ ஏற்படவில்லை. இதையடுத்து இந்த தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து உடனடியாக தெரியவராத நிலையில், போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

budhist temple fire accident in austreliya


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->