பொலிவியா ராணுவ தளத்தில் பயங்கர வெடிவிபத்து: 10 பேர் பரிதாப பலி; 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம்! - Seithipunal
Seithipunal


தென் அமெரிக்க நாடான பொலிவியாவின் தலைநகரான லா பாஸில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ராணுவ தளத்தில் நேற்று திடீரெனப் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. ராணுவத்தின் பீரங்கிப் படைப்பிரிவு செயல்பட்டு வரும் இந்த வளாகத்தில் நிகழ்ந்த இக்கோர விபத்தில் சிக்கி குறைந்தது 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.

விபத்து குறித்துத் தகவல் அறிந்த உடனடியாகத் தீயணைப்பு வீரர்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் அவசர மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களையும் காயமடைந்தவர்களையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்த்தனர். காயமடைந்தவர்களில் பலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

பாதுகாப்பு அமைச்சகத்திற்குச் சொந்தமான வெடிபொருட்கள் மற்றும் பட்டாசுப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்குப் பகுதியிலிருந்தே இந்த வெடிவிபத்து தொடங்கியதாக அதிகாரிகள் முதற்கட்டத் தகவலில் தெரிவித்துள்ளனர். வெடிவிபத்துக்கான துல்லியமான காரணம் என்ன என்பது குறித்துப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் காவல்துறையினரும் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

At Least 10 Killed Over 50 Injured in Massive Explosion at Military Base in Bolivia


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->