வெள்ள நிவாரண பணிகளை பார்வையிட சென்றபோது விபத்தில் சிக்கிய பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர்.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானில் பருவ மழை தீவிரமடைந்ததையொட்டி வழக்கத்திற்கும் அதிகமாக கனமழை பெய்ததில் பலூசிஸ்தான் மாகாணம் வெள்ளத்தில் மூழ்கியது.

கனமழையால் வெள்ளத்தில் சிக்கி 124 பேர் உயிரிழந்து உள்ளனர். 10,000 வீடுகள் சேதமடைந்த நிலையில் 1,97, 930 பயிர் நிலங்கள் மற்றும் 565 கி.மீ. சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் 712 கால்நடைகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளன.

இந்நிலையில் வெள்ளத்தில் மூழ்கிய பலூசிஸ்தான், சிந்து, கில்கிட்-பல்திஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணங்களில் மக்களை மீட்க மற்றும் நிவாரண பணிகளில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டு வருகிறது.

இதையடுத்து பலூசிஸ்தானின் லாஸ்பெலா பகுதியில், வெள்ள நிவாரண பணிகளை பார்வையிட சென்ற ராணுவ ஹெலிகாப்டர் வின்தர் மற்றும் சஸ்சி புன்னு ஆலயம் பகுதிகளுக்கு இடையே வெடித்து விபத்துக்குள்ளானது என பலூசிஸ்தான் போஸ்ட் செய்திகள் தெரிவித்துள்ளது.

மேலும் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் லெப்டினன்ட் ஜெனரல் சர்ப்ராஸ் அலி மற்றும் 5 வீரர்கள் என மொத்தம் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 6 பேர் இருந்த நிலையில், மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஆனால் ராணுவ ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானது பற்றி பாகிஸ்தான் ராணுவம் உறுதிப்படுத்தவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Army helicopter met accident during surveillance


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->