விபத்துக்குள்ளான ஏர் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர்: 3 ஊழியர்கள் பரிதாப பலி! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா, ஓக்லஹோமா மாகாணத்தில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஏர் ஆம்புலன்ஸ் சேவையில் இருந்தது.

இந்த ஏர் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டரில் வெதர் போர்ட் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்து நேற்று இரவு நோயாளி சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. 

நோயாளியை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு மீண்டும் ஹெலிகாப்டர் தளத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது திடீரென ஹெலிகாப்டர் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் ஏர் ஆம்புலன்ஸில் இருந்த மூன்று ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீது குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Air Ambulance Helicopter Crashed 3 Employees Killed


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->