மகளை காப்பாற்றி உயிரிழந்த தாய் – கணவன் கண் முன்னே நடந்த  துயர சம்பவம்! - Seithipunal
Seithipunal


பூங்காவில் மரம் விழுந்ததில் மகளை காப்பாற்றி விட்டு தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் கணவன் கண் முன்னே நிகழ்ந்துள்ளது.

இங்கிலாந்து லங்காஷைர், பிளாக்பர்ன் நகரில் உள்ள விட்டன் கன்ட்ரி பூங்காவில், பலரும் வருகை தருவது வழக்கம். அப்போது 9 வயது மகன் மற்றும் 5 வயது மகள் ஆகியோரை அழைத்து கொண்டு வாசிம் கான், அவருடைய மனைவி மடியா கவுசர் ஆகியோர் சென்றனர். 5 வயது மகளை மடியில் வைத்திருந்த போது மடியா கவுசர் (32) மீது திடீரென மரம் முறிந்து விழுந்தது.

கவுசர், கடைசி நேரத்தில் மகளை தள்ளி காப்பாற்றினார். ஆ னால், தானே மரத்திற்குக் கீழ் சிக்கி உயிரிழந்தார். கணவன் வாசிம் கான் காப்பாற்ற போராடியபோதும் பலனின்றி விட்டது.

சம்பவத்துக்குப் பின், பூங்காவில் உள்ள மரங்களின் கிளைகள் முன்னெச்சரிக்கையாக வெட்டப்பட்டன. கடந்த புதன்கிழமை, லண்டன், பிர்மிங்ஹாம், பிராட்போர்டு உள்ளிட்ட பல இடங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் கவுசரின் இறுதி சடங்கில் கலந்து கொண்டனர்.

இதுபற்றி வாசிம் கான் கூறும்போது, மரம் திடீரென முறிந்து விழும் சத்தம் கேட்டது. காற்று கூட அப்போது வீசவில்லை. வேறு எதுவும் நடக்கவில்லை. நான் ஓடிச்சென்று அவளை காப்பாற்ற முயன்றேன். அப்போது அவள் உயிருடனேயே காணப்பட்டாள் என்றார்.

அவள், மிக அழகான மற்றும் உண்மையானவள். அவள் மீது குழந்தைகள் உள்பட பலரும் அன்பு செலுத்தினர். ஸ்னாப்சாட்டில் மரத்தின் புகைப்படம் ஒன்றையே கடைசியாக வெளியிட்டார். பூங்காவை விட்டு செல்ல தயாராக இருந்தபோது அதனை படம் பிடித்தாள் என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A mother who died saving her daughter a tragic incident happened in front of the husband


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->