பிலிப்பைன்ஸை சூறையாடிய நோரு புயல்.! மீட்பு பணியில் ஈடுபட்ட 6 பேர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸின் வடகிழக்கு பகுதியான கியூஸான் மாகாணத்தில் சக்தி வாய்ந்த நோரு புயல் தாக்கியதில் நியூவா எசிஜா, அரோரா ஆகிய மாகணங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளன.

இதையடுத்து மணிக்கு 160 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியதால், கரையை ஒட்டி அமைந்துள்ள வீடுகள் மற்றும் படகுகள் தூக்கி வீசப்பட்டன.

மேலும் புயலினால் ஏற்பட்ட கனமழையால் அரோரா மற்றும் நியூவா எசிஜா மாகணங்களில் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் வீடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு இதுவரை 52000 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

புயலினால் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதால், மின்இணைப்பு துண்டிக்கப்பட்டு லட்சக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன.

இந்நிலையில் மாகணம் முழுவதும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அரோரா பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மீட்புக் குழுவின் படகின் மீது சுவர் இடிந்து விழுந்ததில் மீட்பு குழுவினர் 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

6 died in typhoon noru attacks on Philippines


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->