ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; 59 படையினர் உயிரிழப்பு..! - Seithipunal
Seithipunal


ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் அந்நாட்டு அரசின் பாதுகாப்பு படையினர் 59 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் அந்நாட்டின் நஜ்ரான் மாகாணத்தின் தெற்கு பகுதியில் நடந்துள்ளது. இது ஏமன் நாட்டின் எல்லலையோர பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு ஏவுகணை மற்றும் ட்ரோன்களை ஹவுதிகள் பயன்படுத்தி உள்ளதாகவும், ஏமன் உள்நாட்டு போரில் கடந்த நான்கு ஆண்டுகளில் இது மிக மோசமான தாக்குதல் என்று அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதலில் சவுதி அரேபியாவுக்கு ஏமன் அரசு துணை புரிந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டை முன்வைத்து ஏமனின் அரசு பாதுகாப்பு படை மற்றும் சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன்களை பயன்படுத்தியதாக ஹவுதி கிளர்ச்சியாளர்களின் செய்தித் தொடர்பாளர் யஹ்யா சரீ தெரிவித்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை அன்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபியாவில் மேற்கொண்ட தாக்குதலில் பொதுமக்கள் 11 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 04 வயது குழந்தை ஒன்றும் அடங்கும் என்று சவுதி அரேபிய ராணுவம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஏமன் நாட்டின் மத்திய மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள ராணுவ முகாம்கள் மீதும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் 30 படை வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

சவுதி ஆதரவுடன் இந்த ராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். ஹவுதி கிளர்ச்சியளர்களுக்கு ஈரான் ஆதரவு வழங்கி வருகிறது. அமெரிக்காவுக்கு சவுதி அரேபியா ஆதரவு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

59 Yemeni soldiers killed in Houthi rebel attack


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->