கிழக்கு உக்ரையினில் குடியிருப்பு கட்டிடத்தின் மீது தாக்குதல் - 5 பேர் பலி, 27 பேர் காயம் - Seithipunal
Seithipunal


ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைய உக்ரைன் விரும்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி உக்ரைன் மீது போரை தொடங்கியது. தற்பொழுது போர் 10 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இப்போரை முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகள் மற்றும் ஐநா மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்து, இருதரப்புகளும் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும் இப்போரில் உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆயுதங்களை வழங்கி ஆதரவு தெரிவித்து வருகின்றது.

இந்நிலையில் கிழக்கு உக்ரைன் நகரமான டினிப்ரோவில் நேற்று ரஷ்யா படைகள் பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் குடியிருப்பு கட்டிடத்தின் மீது நடந்த தாக்குதலில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் ஆறு குழந்தைகள் உட்பட 27 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 killed 27 injured in attack on residential building in eastern Ukraine


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->