பாகிஸ்தான் :: நேருக்கு நேர் மோதி பள்ளத்தாக்கில் கவிழ்ந்த கார்-பஸ்.! 30 பேர் பலி, 15 பேர் காயம்.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானில் காரகோரம் நெடுஞ்சாலையில் நேருக்கு நேர் மோதி பயணிகள் பேருந்தும், காரும் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 30 பேர் உயிரிழந்தனர் மற்றும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தான் கில்கிட்டில் இருந்து ராவல்பிண்டிக் நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது கோஹிஸ்தான் மாவட்டத்தில் உள்ள காரகோரம் நெடுஞ்சாலையில் ஷிடியால் பகுதியில் சென்றபோது எதிர்பாராத விதமாக எதிரே வந்த கார் மீது நேருக்கு நேர் மோதி பேருந்தும், காரும் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த பயங்கர விபத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பாகிஸ்தான் அதிபர் டாக்டர் ஆரிப் ஆல்வி மற்றும் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

30 killed 15 injured in bus car accident in Pakistan


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->