கலிபோர்னியாவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு - 3 பேர் பலி, 4 பேர் காயம்.! - Seithipunal
Seithipunal


கலிபோர்னியாவில் விருந்து நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரின் சுற்றுப்பகுதியான பெவர்லி சிரெட்ஸ்யில் உள்ள சொகுசு வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் அதிகாலை 2:30 மணியளவில் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து துப்பாக்கி சூட்டில் நான்கு பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் இந்த துப்பாக்கிச் சூடு, இந்த மாதத்தில் கலிபோர்னியாவில் நடந்த நான்காவது துப்பாக்கிச் சூடு சம்பவமாகும்.

துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள், இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சனிக்கிழமை இரவு லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியின் மான்டேரி பூங்காவில் உள்ள நடன ஸ்டுடியோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

3 killed 4 injured in shooting in California America


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->