உக்ரைன் கார்கீவ் பகுதியில் தொடரும் ரஷ்யப் படைகளின் தாக்குதல்.! 3 பேர் பலி - Seithipunal
Seithipunal


ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையேயான போர் 5 மாதங்களையும் கடந்து நீடித்து வருகிறது. நாளுக்கு நாள் தீவிரமடையும் போரில் உக்ரைனின் கிழக்கு மாகாணத்தின் முக்கியமான நகரங்களைை ரஷ்யா கைப்பற்றியுள்ளது.

மேலும் கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைன் பகுதிகளில் ரஷ்ய படைகள் தாக்குதலை தீவிர படுத்தியுள்ளன. இந்நிலையில் உக்ரைனின் முக்கிய நகரமான கார்கீவ் பகுதியில் ரஷ்ய ராணுவம் ஏவுகணைகள் மற்றும் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து ரஷ்ய படைகள் நடத்திய தொடர் தாக்குதலால் அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் தீ பரவத் தொடங்கியுள்ளது.

மேலும் கடந்த திங்கள்கிழமை கார்கீவ் பகுதியில் ரஷ்ய படைகள் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

3 dies in Russian attack on karkiev in ukraine


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->