இலங்கை || கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலி
3 died in landslide in srilanka
இலங்கையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் 6 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தும், ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த கனமழையால் 13,902 குடும்பங்களைச் சேர்ந்த 55,000 ககும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு இருப்பதாக அந்த நாட்டு பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக நிலச்சரிவு சம்பவங்கள் வருகிற 19-ந்தேதி வரை தொடரும் என்பதால் 6 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழை தொடரும் பட்சத்தில் சில பகுதிகளில் வெள்ள அபாயம் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
3 died in landslide in srilanka