இலங்கை || கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலி - Seithipunal
Seithipunal


இலங்கையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் 6 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தும், ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த கனமழையால் 13,902 குடும்பங்களைச் சேர்ந்த 55,000 ககும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு இருப்பதாக அந்த நாட்டு பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக நிலச்சரிவு சம்பவங்கள் வருகிற 19-ந்தேதி வரை தொடரும் என்பதால் 6 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழை தொடரும் பட்சத்தில் சில பகுதிகளில் வெள்ள அபாயம் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 died in landslide in srilanka


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->