காசாவில் நிவாரண முகாம் அருகே இஸ்ரேல் தாக்குதல்; 27 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு: போர் குற்றம் ஐ.நா தெரிவிப்பு..! - Seithipunal
Seithipunal


இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனத்தை சேர்ந்த 27 பேர் உயிரிழந்துள்ளனர். காசாவின் தெற்கு முனை பகுதியில், நிவாரண பொருட்கள் வழங்கும் இடமருகே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக இஸ்ரேல் விமானப்படை விளக்கமளித்துள்ளது. குறிப்பிட்ட வழித்தடத்தை தாண்டி சந்தேகத்திற்கு இடமான வகையில் வேறு பகுதிகளில் அவர்கள் சென்றதாகவும், தங்கள் படைகள் அருகே வர வேண்டாம் என்ற எச்சரிக்கையை அவர்கள் பொருட்படுத்தவில்லை என குறிப்பிட்டுள்ளது. அத்துடன், என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடப்பதாகவும் தெரிவித்துள்ளது.

காசாவின் வடக்கு முனையில் தங்களது நாட்டை ராணுவத்தைச் சேர்ந்த மூன்று வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஆனால், இதனை ஐ.நா., மனித உரிமைகள் அமைப்பு ஏற்க மறுத்துள்ளது. இந்த தாக்குதல் குறித்து பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்த வேண்டும் எனவும், சாமானிய மக்கள் மீது தாக்குதல் நடத்துவது என்பது சர்வதேச சட்டங்களை மீறிய செயல் மற்றும் போர் குற்றம் ஐ.நா தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

27 Palestinians killed in Israeli attack near aid camp in Gaza


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->