நள்ளிரவில் மனு தாக்கல் செய்வது எதிர்பார்க்கவில்லை...! - பி.ஆர். கவாய் கடும் எச்சரிக்கை...! - Seithipunal
Seithipunal


தீர்ப்பாய சீர்திருத்தச் சட்டத்தின் அரசியலமைப்பு செல்லுபடியை சவாலிட்ட மனுக்களை 5 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்விற்கு மாற்றுமாறு மத்திய அரசு வைத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நேற்று கடுமையாக நிராகரித்தது.இந்த மனுக்கள், பல்வேறு தீர்ப்பாயங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான சேவை நிபந்தனைகளை ஒரே மாதிரியாக்கும் சட்டம் குறித்து தாக்கல் செய்யப்பட்டவை.

இதுகுறித்து தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தி வந்தது.இந்த விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, மத்திய அரசின் சார்பில் அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி, சர்வதேச நடுவர் மன்றத்தில் பங்கேற்க அனுமதி கோரியதை ஏற்று, நீதிமன்றம் விசாரணையை தற்காலிகமாக ஒத்திவைத்தது.

அதேசமயம், மத்திய அரசு நள்ளிரவு நேரத்தில் தாக்கல் செய்த மனுவில், வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்தது. இதனை உச்ச நீதிமன்றம் திடமாக நிராகரித்தது.தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கடும் நெடுங்கணக்காகக் தெரிவித்ததாவது,"அரசுக்கு எதிரான வழக்கை என் தலைமையிலான அமர்வு விசாரிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை என்பது தெளிவாகிறது.

திட்டமிட்ட விசாரணைக்கு முன்பே நள்ளிரவில் மனு தாக்கல் செய்வது போன்ற நடவடிக்கைகள் மத்திய அரசிலிருந்து வரும் என எங்களுக்கே எதிர்பார்ப்பு இல்லை.மனுதாரர்களின் வாதங்களை முழுமையாகக் கேட்ட பிறகு மட்டுமே வழக்கை பெரிய அமர்விற்கு மாற்றும் வாய்ப்பு இருக்க முடியும்.

ஆனால் இப்போது அத்தகைய அவசரம் இல்லை” என்று அவர் தெளிவுபடுத்தினார்.இதன் மூலம், மத்திய அரசின் நள்ளிரவு முயற்சிக்கு உச்சநீதிமன்றம் “இல்லை” என்ற பதில் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

I didnt expect to file petition at midnight PR Kawai warns sternly


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->