அயர்லாந்து || பெட்ரோல் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து - 10 பேர் பலி - Seithipunal
Seithipunal


அயர்லாந்து பெட்ரோல் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஐரோப்பிய நாடான அயர்லாந்தின் டொனேகல் மாவட்டம், க்ரீஸ்லா பகுதியில் அமைந்துள்ள பெட்ரோல் சேவை நிலையத்தில் எதிர்பாராத விதமாக திடீரென்று வெடி விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தினால் பெட்ரோல் நிலையத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களின் சுவர்கள் இடிந்து விழுந்தன. மேலும் முதல் தளம் முழுவதும் தீ பற்றி கொழுந்துவிட்டு எரிய தொடங்கின.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்து, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேர் பலத்த காயங்களுடன் அருகிலுள்ள லெட்டர்கெனி பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த விபத்திற்கு எந்த சதி செயலும் காரணமில்லை எனவும், விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10 died in blast in petrol service station in Ireland


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->