பிரான்ஸ் : அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து.! 5 குழந்தைகள் உட்பட 10 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


கிழக்கு பிரெஞ்சு நகரமான லியோனின் அருகே புறநகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரான்ஸ் ரோன் மாகாணத்தின் வால்க்ஸ் என் வெலின் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

இருப்பினும் இந்த தீ விபத்தில் 5 குழந்தைகள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளனர். பலத்த காயமடைந்த 4 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 15 பேர் சிறு காயங்களுடன் உள்ளனர். இதில் இரண்டு தீயணைப்பு வீரர்களும் அடங்குவர்.

இதைத்தொடர்ந்து இந்த தீ ஏற்படுவதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை என்பதால் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

10 dead including 5 children in apartment fire in Lyon France


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->