குடை ரெடியா! இன்று முதல் ஜூலை 5ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு...! - வானிலை ஆய்வு மையம்
Umbrellas ready Chance of thunder and lightning from today to July 5th Meteorological Department
சென்னை வானிலை ஆய்வு மையம் மழை குறித்து அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டதாவது,"மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 1, 2-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.வரும் 3-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 4, 5-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று தெரிவித்துள்ளது.
ஆகையால் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வலியுறுத்தப்படுகிறது.
English Summary
Umbrellas ready Chance of thunder and lightning from today to July 5th Meteorological Department