சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: நிபுணர்கள் சோதனை..! - Seithipunal
Seithipunal


சென்னை விமான நிலையத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு மர்ம இமெயில் வந்த நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, விமான நிலைய வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் போலி என தெரியவந்தது.

இந்தியாவில் விமானங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதால், உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்கள் அவசர அவரமாக தரையிறக்கப்படுகின்றன. இதனால் விமான நிலையம் மற்றும் பயணிகள் பெரும் அச்சத்து உள்ளாகின்றனர்.

இவ்வாறான வெடிகுண்டு மிரட்டல்களை தொடர்ந்து விமானங்கள் மற்றும் விமான நிலையங்கள் சோதனை செய்யப்படுகின்றன. ஈமெயில் மற்றும் சமூகவலைதள பக்கங்கள் மூலம் இந்த மிரட்டல் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விமான நிலையத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்.? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bomb threat to Chennai Meenambakkam airport


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->