பதிலடி கொடுக்கப்படும்: இந்தியாவை மிரட்டிய பாகிஸ்தான் ராணுவ தளபதி!
Response will be given Pakistan Army Chief threatening India
வருங்காலத்தில் இந்தியா ஏதேனும் தாக்குதல் நடத்தினால், உறுதியான பதிலடி தரப்படும் என்று அசீம் முனிர் கூறியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த, தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கு உள்ள தொடர்பு தெரிய வந்தது.
இதற்கு பதிலடியாக, இந்திய ஆயுத படைகள் சார்பில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது இந்திய ராணுவம், பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து 9 பயங்கரவாத உட்கட்டமைப்புகளை தாக்குதல் நடத்தியது.
இந்த சம்பவத்திற்கு பின்பு, போர் பதற்ற சூழல் உருவானது. 4 நாட்களுக்கு பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த முடிவுக்கு வந்தன. இந்தநிலையில் இந்திய ராணுவத்தின் முன்னறிவிப்பில்லாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் உறுதியான பதிலடி கொடுத்தது என அசீம் முனிர் கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள அந்நாட்டின் கடற்படை அகாடமியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பாகிஸ்தான் மீது எந்தவித முன்னறிவிப்பும் இன்றி 2 முறை இந்தியா தாக்கியது.
இந்திய ராணுவத்தின் முன்னறிவிப்பில்லாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் உறுதியான பதிலடி கொடுத்தது. தூண்டி விட்டபோதும், பாகிஸ்தான் கட்டுப்பாட்டுடனும், பக்குவத்தன்மையுடனும் நடந்து கொண்டது. நாடுகளுக்கு இடையேயான அமைதியில் உள்ளார்ந்த ஈடுபாட்டுன் இருக்கிறோம் என நாம் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளோம் என கூறியுள்ளார்.
English Summary
Response will be given Pakistan Army Chief threatening India