மும்பை விமான நிலையத்தில் 5.119 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்: தாய்லாந்தில் இருந்து வந்தவர் கைது..! - Seithipunal
Seithipunal


மும்பை விமான நிலையத்தில் 5.119 கிலோ உயர் ரக கஞ்சா கடத்தி வந்த தாய்லாந்தில் இருந்த வந்த பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்த கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 27 அன்று, பாங்காக்கிலிருந்து இந்தியர் ஒருவர், இண்டிகோ 6இ 1052 விமானத்தில் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

சுங்க அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், மும்பை விமான நிலைய சுங்க மண்டலம்-III இன் அதிகாரிகள், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து வந்த பயணியிடம் சோதனை நடத்தினர். அப்போது அந்த நபர் கொண்டுவந்த சரக்கு வைக்கும் தள்ளுவண்டியில் மறைத்து வைத்திருந்த ரூ.5.11 கோடி மதிப்புள்ள, 5.119 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை பறிமுதல் செய்து அவரையும் கைது செய்துள்ளனர்.

போதைப்பொருள் தடுப்பு சட்டம், 1985 இன் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதோடு, கைது செய்யப்பட்டவர் உடனடியாகக் காவலில் எடுக்கப்பட்டு, இந்த கடத்தலில் தொடர்புடைய நபர்களை கண்டறியவும் போலீசார் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

ஹைட்ரோபோனிக் நுட்பங்களைப் பயன்படுத்தி வளர்க்கப்படும் உயர்தர கஞ்சா, வீரியம் வாய்ந்தது மற்றும், அதன் தூய்மைக்காக கள்ளச் சந்தையில் மிகவும் விரும்பப்படுகிற போதை பொருளாக உள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் இந்த உயர் தர கஞ்சாவுக்கு விலை மதிப்பும் அதிகமாகவுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thai man arrested at Mumbai airport with 5kg hydroponic cannabis


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->