17 மாவட்டங்களில் இரவு முதல் கனமழை அல்லது மிக கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்! - Seithipunal
Seithipunal


அடுத்த இரண்டு நாட்களுக்கு பெரும்பாலான தமிழகம் மற்றும் புதுவையின் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மைய அதிகாரி புவியரசன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது, வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. 

அந்த வகையில், திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று இரவு முதல் ஒரு சில இடங்களில் கனமழை அல்லது மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

நாளை இரவு தமிழ் நாட்டின் தென்மாவட்டங்களான மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி,உள்ளிட்ட  மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும். சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

குமரி கடல் பகுதி, மாலத்தீவு மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் சூறை காற்று வீச இருப்பதால் மீனவர்கள் இன்றும், நாளையும்  மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

நேற்று, 17 மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்துள்ளது. தமிழகத்திலே அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டம் காமாட்சிபுரத்தில் 16 செ.மீ மழை பெய்துள்ளது, இதேபோல கள்ளக்குறிச்சி 14, வேடசந்தூர் 13 செ.மீ, பட்டுக்கோட்டை 11 செ.மீ, தஞ்சாவூர் 10 செ.மழை மழை பதிவாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today night onwards rain for 17 district


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->