டிட்வா அலைமோதும் எச்சரிக்கை: இன்று 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்... நாளை 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்...! - Seithipunal
Seithipunal


இலங்கை கடற்கரைக்கு அருகில் உருவாகியுள்ள டிட்வா புயல், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 430 கி.மீ மற்றும் சென்னைக்கு தென்கிழக்கே 530 கி.மீ தொலைவில் வேகமெடுத்து நகர்கிறது. நவம்பர் 30 அதிகாலை நேரத்தில், இது வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரை பகுதிகளை ஒட்டி தென்மேற்கு வங்கக்கடலில் தீவிரமாக அமர்வதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் பகுதிகளில் அதிக-அதிக கனமழை பதிவு செய்யப்படும் என கணிப்பு.
ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்கள்:
மயிலாடுதுறை, அரியலூர், சிவகங்கை, தூத்துக்குடி – மிக கனமழை சாத்தியம்.
கனமழை வாய்ப்பு:
கடலூர், அரியலூர், சிவகங்கை, தூத்துக்குடி – திடீர் பலத்த மழை பெய்யக்கூடும்.
நாளைய நிலை – விழித்திருக்க வேண்டிய மாவட்டங்கள்
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, புதுச்சேரி – நாளை அதிகனமழை எச்சரிக்கை.
மிக கனமழை ஏற்படும் மாவட்டங்கள்:
சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, அரியலூர், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, நாகை.
கனமழை வாய்ப்பு:
வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், கரூர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Titva Tide Warning Red Alert for 5 districts today Orange Alert for 14 districts tomorrow


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->