தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வழக்கத்தை விட இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி விட்டது. வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று முதல் ஒன்றாம் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 30ம் தேதி வெயிலின் தாக்கம் அதிகமாக  இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தமிழகத்தில் அவ்வபோது சில மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் இன்று காலை பத்து மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

three days rain in tamilnadu


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->