தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.! மிக அதிக கனமழையில் சிக்கும் 3 மாவட்டங்கள்.!
tamilnadu weather report nov 30
இன்று காலை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று உள்ளது. வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக டிசம்பர் 2-ந்தேதி தென் தமிழகத்தில் அதி கனமழையும், வட தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழக கடற்கரை பகுதியை நெருங்கும் பொது புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருபதாவது, "கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் டிசம்பர் 1-ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 2-ஆம் தேதி கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, மாவட்டங்களில் அதி கனமழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
டிசம்பர் 3-ஆம் தேதி கன்னியாகுமரி, தேனி, தூத்துக்குடி, விருதுநகர், மாவட்டங்களில் மிக கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்களான புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக் கூடும். மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும்" சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
tamilnadu weather report nov 30