அடுத்த 10 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு - தமிழ்நாடு வெதெர்மேன் தகவல்!
Tamilnadu Weather man Report Rain Alert
தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் மே 23 முதல் தொடர் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.
அவரது கணிப்பின் படி, கோவை மாவட்டத்தின் வால்பாறை, நீலகிரியின் கூடலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த 10 நாட்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும்.
குறிப்பாக சில இடங்களில் 20 செ.மீ. வரைக்கும் மழை பதிவாகும் சாத்தியம் உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் ஏற்படும் வலுவான மிதமான காற்றழுத்தம், மேக சுழற்சி போன்ற காரணிகளால் இவ்வாறு நிலவும் என்று அவர் தெரிவித்தார்.
English Summary
Tamilnadu Weather man Report Rain Alert