மக்களே உஷார்.. 12 மணி நேரத்தில் புயல் உருவாகிறது.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!
Storm forming in 12 hours in Arabian sea
தென்மேற்கு பருவ மழை தொடங்கியதற்கான அறிகுறிகள் கேரளா மற்றும் தெற்கு கர்நாடகாவில் தென்பட தொடங்கியுள்ளது. லட்சத்தீவு ஒட்டிய கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியதை அடுத்து தென்கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது உருவானது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை குறைந்த காற்றழுத்து தாழ்வு மண்டலமாக வலுவடைந்து இருந்தது. அடுத்த 24 மணி நேரத்தில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று காலை அறிவித்திருந்த நிலையில் தற்பொழுது அடுத்த 12 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக மாறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப அலை வீசும் எனவும், இயல்பை விட 4 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
English Summary
Storm forming in 12 hours in Arabian sea