தென்மேற்கு பருவமழை தொடங்கும் தேதியில் மாற்றம்.. வானிலை ஆய்வு மையம் தகவல்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காலத்தில் தென் மாநிலங்கள் மற்றும் வட மாநிலங்களில் அதிக மழைப் பொழிவு ஏற்படும். அந்தமான் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படும்போது இந்திய வானிலை ஆய்வு மையம் இதனை  கணித்து தென்மேற்கு பருவமழை தொடங்கும் தேதியை அறிவிக்கும். 

ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்குவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு அந்தமான் தீவுகளில் பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் முன்கூட்டியே தெரிந்துள்ளது. இதனால், வருகின்ற 27-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. 

தற்போது சீதோஷ்ண நிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக 27ஆம் தேதிக்கு பதில் 23-ஆம் தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்கி விடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டால் தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் அதிக மழை பெய்யும். தற்போதே தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Southwest Monsoon Start for May 23


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->