தென்மேற்கு பருவமழை தொடங்கும் தேதியில் மாற்றம்.. வானிலை ஆய்வு மையம் தகவல்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காலத்தில் தென் மாநிலங்கள் மற்றும் வட மாநிலங்களில் அதிக மழைப் பொழிவு ஏற்படும். அந்தமான் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படும்போது இந்திய வானிலை ஆய்வு மையம் இதனை  கணித்து தென்மேற்கு பருவமழை தொடங்கும் தேதியை அறிவிக்கும். 

ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்குவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு அந்தமான் தீவுகளில் பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் முன்கூட்டியே தெரிந்துள்ளது. இதனால், வருகின்ற 27-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. 

தற்போது சீதோஷ்ண நிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக 27ஆம் தேதிக்கு பதில் 23-ஆம் தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்கி விடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டால் தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் அதிக மழை பெய்யும். தற்போதே தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Southwest Monsoon Start for May 23


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->