தமிழகத்திற்கு இரு நாள் ரெட் அலெர்ட்! - Seithipunal
Seithipunal


தென்மேற்கு பருவமழை கேரளத்தில் தொடங்கிய நிலையில், அதன் தாக்கம் தற்போது தமிழகத்திலும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் கனமழை பதிவாகி வருகிறது.

கோயம்புத்தூர், நீலகிரியில் கடந்த மூன்று நாள்களாகவும் தற்போது மற்றும் மே 29, 30 ஆகிய தினங்களிலும் அதி கனமழைக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்று (மே 28) நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கன்னியாகுமரி, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை ஏற்படும் வாய்ப்பும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மே 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் அதிகனமழை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, குமரி மாவட்டங்களில் மிக கனமழை, திருப்பூர், திண்டுக்கலில் கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Southwest Monsoon IMD Red Alert orange alert 


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->