தமிழகத்தில் 15 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை.! வானிலை ஆய்வு மையத்தின் அதிரடி அறிவிப்பு.!!
sep 24 weather report
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக வேலூர், திருவள்ளூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி ஆகிய 15 மாவட்டங்களில் இன்று இரவு ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
நாளை மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். இரவு நேரங்களை ஒரு சில இடங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று சென்னைக்கு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.