மக்களே! மதியம் 1 மணி வரை மழை பெய்யக்கூடிய பகுதிகள்! - வானிலை மையம்
People Areas likely to receive rain until 1 pm Meteorological Department
சென்னை வானிலை ஆய்வு மையம்,"இன்று தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.
அவ்வகையில், நீலகிரி, தென்காசி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் லேசான இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் தேவையான பொருட்களை பத்தரப்படுத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
English Summary
People Areas likely to receive rain until 1 pm Meteorological Department