தமிழகத்தின் 3 மாவட்டங்களில் புரட்டி எடுக்க போகும் மிக கனமழை.!!
nov 26 heavy rain in 3 districts
வங்கக்கடலில் தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நவம்பர் 29ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை மையம் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுத்து மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடும். தமிழ்நாட்டின் கரை நோக்கு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்வதால் நவம்பர் 29ம் தேதிக்கு பின் மழைக்கு வாய்ப்பு இருக்கும்.
இதன் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
nov 26 heavy rain in 3 districts