#JUSTIN || தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் "இடியுடன் கூடிய மழை" - வானிலை ஆய்வு மையம்
Next three hours chance of rain in 20 districts of tamilnadu
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்ப சனலம் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் பல்வேறு பகுதிகளில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் வாட்டி வதைத்தும் வருகிறது. இந்நிலையில் மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று முதல் வருகின்ற 9ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இந்நிலையில் தற்பொழுது தமிழகத்தின் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், சேலம், திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.
மேலும் புதுச்சேரி பகுதிகளிலும் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
Next three hours chance of rain in 20 districts of tamilnadu