தமிழகத்தை நெருங்கும் மீண்டும் ஒரு புயல்.. ஆரஞ்ச் அலர்ட்.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!!
next cyclone for tailnadu
நிவர் புயலை தொடர்ந்து வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 1ஆம் மற்றும் 2ஆம் தேதி தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளை மத்திய வங்க கடலில் உருவாகும் புயல் காரணமாக தமிழகத்தில் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 2 ஆம் தேதி நாகப்பட்டினம் அருகே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு பலத்த காற்று வீசக்கூடும் என்பதாகும் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் மீன்வளத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
English Summary
next cyclone for tailnadu