தமிழ்நாட்டில் இன்று முதல் மழைக்கு வாய்ப்பு.!! - Seithipunal
Seithipunal


நாட்டில் நேற்று வரை பதிவான வெயிலின் படி ஈரோடு, திருப்பத்தூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் 107, வேலூரில் 106, திருத்தணி, திருச்சி தர்மபுரியில் 105, பரமத்தி வேலூர் மற்றும் தஞ்சாவூரில் 104, மதுரை மற்றும் கோவையில் 103, சென்னையில் 102, பாளையங்கோட்டையில் 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவாகி உள்ளது.

தமிழகம் முழுவதும் வடவுல் மாவட்டம் மற்றும் உள் மாவட்டங்களில் வெயில் கொளுத்தி வரும் இந்த சூழலில் தென்னிந்திய பகுதிகளில் நிலவும் மேல் வளிமண்டல கீழ அடுக்குகளில் காற்றின் திசைவேகம் மாறுபாடு காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

இந்த காற்று திசை வேக மாறுபாடு காரணமாக தென் தமிழக மாவட்டங்கள் டெல்டா மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓர் இடங்களிலும் காரைக்கால் பகுதியிலும் இன்று முதல் அடுத்த ஆறு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி வரும் ஏப்ரல் 10, 11, 12 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடிமின்களுடன் கூடிய லேசா தந்து முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோன்று ஏப்ரல் 13 ஆம் தேதி ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்பநிலையை பொறுத்த வரை இன்று முதல் வரும் 11ஆம் தேதி வரை வழக்கத்தை விட 5 டிகிரி பாரன்ஹீட் வரை அதிகரிக்க கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Next 6 days rain will occur in tamilnadu


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->