இன்று உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை ஆய்வு மையம் தகவல்.!!
new cyclone update on dec 17
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்தே பரவலாக மழை பெய்து வந்த நிலையில், இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து மழையின் தாக்கம் குறைந்துள்ளது. இதனால் கடந்த ஒரு வாரமாக பல இடங்களில் வறண்ட வானிலை நிலவுகிறது.
இந்நிலையில், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தென் மேற்கு வங்க கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும், ராமநாதபுரம் புதுக்கோட்டை டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை வாய்ப்புள்ளதாகவும், 19ஆம் தேதி வரை தென் மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
English Summary
new cyclone update on dec 17