அடுத்த புயல்.? 24 மணி நேரத்தில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. வானிலை மையம் எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


கடந்த 21ம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக்கி, அதன் பிறகு நிவர் புயலாக வலுப்பெற்றது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வந்தது. குறிப்பாக கடலூர், விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களிலும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வந்தது.

வங்க கடலில் உருவான நிவர் புயல் கடந்த 25ஆம் தேதி நள்ளிரவு 2 மணிக்கு மரக்காணம்-புதுச்சேரி இடையே கரையை கடந்தது. இந்த புயலால் புதுச்சேரி மிகவும் பாதிக்கப்பட்டது. மேலும் தமிழகத்திலும் பல இடங்களில் சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த புயலால் மரங்கள் முறிந்து விழுந்து, வீடுகள் இடிந்து, மேலும் கனமழை காரணமாக பயிர்கள் நீரில் மூழ்கியும் சேதமடைந்தது. 

இந்நிலையில், வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வலுவடைந்து வரும் 2-ம் தேதி தமிழகம் மற்றும் புதுவை கடற்பகுதியில் நெருங்கும்.

இதனால், டிசம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. புதிய காற்றழுத்த மண்டலம் தமிழக பகுதியை நோக்கி நகரும். மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறவும் வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new cyclone for tamilnadu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->