அதிகாலையே கொட்டித் தீர்த்த மழை.. குளுகுளுவென மாறிய சென்னை.!! - Seithipunal
Seithipunal


தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் கடந்த வார இறுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இது மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. நேற்று முன்தினம் காலை இது புயலாக வலுப்பெற்றது. 

இந்த புயலுக்கு அசானி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயலால் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், நேற்று நள்ளிரவு முதல் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்து வருகிறது. சென்னை புரசைவாக்கம், எழும்பூர், வேப்பேரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, போரூர், ஐயப்பன்தாங்கல், மதுரவாயல் போன்ற பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. மக்களை வெப்பம் வாட்டி வதைத்த நிலையில், மழை காரணமாக இதமான சூழ்நிலை நிலவுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

morning rain in chennai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->