உஷார் மக்களே! காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறும்...! - இந்திய வானிலை ஆய்வு மையம்
low pressure area will strengthen in the next 24 hours India Meteorological Department
நேற்று வானிலை ஆய்வு மையம்," வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு குஜராத் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும்.

இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுவடையக்கூடும். இதன்காரணமாக தமிழகத்தில் வரும் 22-ந்தேதி வரை மழை பெய்யக்கூடும்" என்று தெரிவித்திருந்தது.
இந்திய வானிலை ஆய்வு மையம்:
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம், "இந்திய நிலப்பரப்பையொட்டிய 2 பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவானது.இதனால், தெற்கு குஜராத் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற்று வடக்கு, வடமேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது.
மேலும் தென்மேற்கு வங்கதேசம் அதனையொட்டிய கங்கை நதி மேற்கு வங்கத்திலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது அடுத்த 24 மணிநேரத்தில் வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு நோக்கிர நகர வாய்ப்பு உள்ளது" என்று தெரிவித்துள்ளது.இதனால் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வலியுறுத்தப்படுகிறது.
English Summary
low pressure area will strengthen in the next 24 hours India Meteorological Department