கேரளாவில் புரட்டி எடுக்கும் கனமழை.. 6 மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை.!!
kerala 6 districts heavy rain
கேரளாவில் கடந்த ஜூன் 1ம் தேதி தென்மேற்கு பருவம் மழை தொடங்கியது. முதல் இரண்டு வாரங்களுக்கு லேசான மழை பெய்து வந்தது. அதன் பிறகு தீவிரமடைந்தது. பின்னர் மீண்டும் லேசாக மழை பெய்தது.
தற்போது மீண்டும் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. கடந்த இரண்டு வருட கேரளாவில் மலையோர மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால், பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
இந்நிலையில், கேரளாவில் பெரும்பாலான பகுதியில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய மாநிலம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக இடுக்கி, திருச்சூர், காசர்கோடு, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் எண்ணூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். இதனால் இந்த 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
English Summary
kerala 6 districts heavy rain