மக்களே உஷார்!!! 36 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும்...! - இந்திய வானிலை ஆய்வு மையம் - Seithipunal
Seithipunal


கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்னதாகவே தொடங்க இருப்பதாக செய்தி வெளிவந்த நிலையில், அடுத்த 4 அல்லது 5 நாட்களில் தொடங்க வாய்ப்புள்ளது என  தெரியவந்துள்ளது.

இதில் சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம், அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம்:
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது,"மத்திய அரபிக்கடல் பகுதியில் அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.கர்நாடகா - கோவா கடற்கரையில் கிழக்கு மத்திய அரபிக்கடலில் உருவான மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும்.

குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்" என்று தெரிவித்துள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

It will strengthen into a depression in 36 hours India Meteorological Department


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->