உஷார் மக்களே...! பலத்த காற்றுடன் கூடிய கனமழை... எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
Heavy rain with strong winds districts
சென்னை வானிலை ஆய்வு மையம் மழை குறித்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.அதில் தெரிவித்திருப்பதாவது,"அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 3 தினங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில், கிருஷ்ணகிரி,ஈரோடு, கோவை, தருமபுரி, திருப்பூர், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல்லில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், நாளை மறுநாள் தஞ்சாவூர்,கடலூர்,பெரம்பலூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
கனமழை பெய்யும் போது 40 முதல் 50கி.மீ வேகத்தல் காற்று வீசக்கூடும்.சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேநேரம் சென்னையில் மதிய வேளையில் 38° செல்சியஸ் வெப்பம் பதிவாகக்கூடும் " என அறிவித்துள்ளது.
English Summary
Heavy rain with strong winds districts