அதிகனமழை! வெதர்மேன் கொடுத்த தகவல் என்ன?
Heavy rain What information did the weatherman give
தென்மேற்கு பருவமழை நீலகிரி மாவட்டத்தில் தீவிரம் அடைந்துள்ளது.இதில் கடந்த 2 தினங்களாக மாவட்ட முழுவதுமே, பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

இதனால் தற்போது நீலகிரி மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், நேற்றும் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை நீடித்தது.இந்தக் கனமழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும், பல இடங்களில் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகின.இந்த தொடர் மழை காரணமாக நீலகிரியிலுள்ளஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதில் குட்டைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. மேலும் மாவட்டத்திலுள்ள அவலாஞ்சி அணை, குன்னூர் ரேலியா அணை, அப்பர் பவானி உள்பட அனைத்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
பிரதீப் ஜான்:
இந்நிலையில் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,"நீலகிரியில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 35 செ.மீ. மழை பதிவாகி உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Heavy rain What information did the weatherman give