சென்னையில் மீண்டும்.. வட தமிழகத்திற்கு "ஆரஞ்சு நிற" கனமழை அலெர்ட்.!! - Seithipunal
Seithipunal


லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு  சுழற்சி நிலவுதாலும், தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் மேலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுதாலும் தென் தமிழக மாவட்டம் மற்றும் வட தமிழக கடலோர மாவட்டங்களில் அனேக இடங்கள் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிடங்களிலும் இடி மின்னல் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்தந்தது. 

குறிப்பாக செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் தற்போது வட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே போன்று ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

heavy rain Orange alert for North Tamil Nadu


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->