#மக்களே உஷார்: தமிழகத்தில் "வெப்ப அலை" நிலவுக்கூடும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Heat wave likely to prevail in Tamil Nadu interior places
தமிழக உட்பகுதிகளில் வெப்ப அலை நிலவுக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்தும், வெயிலின் தாக்கம் அதிகரித்து பல்வேறு இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது. மேலும் ஒரு சில இடங்களில் தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இன்று மற்றும் நாளை அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் ஒருசில இடங்களில் இயல்பிலிருந்து 2-4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.
வெப்பஅலை எச்சரிக்கை:
தமிழக உட்பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அதிக வெப்பநிலை மற்றும் அதிகாஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
Heat wave likely to prevail in Tamil Nadu interior places