6 மணி நேரத்தில் உருவாகிறது "பிபோர்ஜோய் புயல்" - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
Cyclone Piper Joy forms in Arabian Sea in 6 hours
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நேற்று மாலை உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 05:30 மணி அளவில் மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவுகிறது. இது அடுத்த 6 மணி நேரத்தில் மத்திய கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த புயலுக்கு "பிபோர்ஜோய்" என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் பைபர் ஜாய் புயல் காரணமாக, அரபிக்கடலின் ஆழ்கடல் பகுதியில் உள்ள மீனவர்கள் உடனே கரைக்கு திரும்ப வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. கேரளா, தெற்கு கர்நாடகாவின் உள்பகுதி, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக பத்தாம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
Cyclone Piper Joy forms in Arabian Sea in 6 hours