எச்சரிக்கை! இரவு 7 மணி வரை 5 மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு...! - வானிலை மையம்
Chance of thundershowers in 5 districts till 7 pm Meteorological Department
சென்னை வானிலை ஆய்வு மையம்,'இன்று தமிழகத்தில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்' என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.
அவ்வகையில், நீலகிரி, தென்காசி, மதுரை, திண்டுக்கல் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Chance of thundershowers in 5 districts till 7 pm Meteorological Department