நவம்பர் 21-இல் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு..!
A new low pressure area is likely to form on November 21st
வரும் நவம்பர் 21-இல் தென்கிழக்கு வங்கக்கடலில், புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, அக்டோபர் 16இல் தொடங்கியது. அதன் பின்னர் ஓரிரு நாட்களில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனால், தமிழகத்தில் பருவமழை தீவிரமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து, ஆந்திரா நோக்கிச் சென்றது. அதன்பின் உருவான, மற்றொரு காற்றழுத்த தாழ்வு மியான்மர் நோக்கிச் சென்றது. இந்நிலையில், புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானால் தான், பருவமழை தீவிரமாகும்.
இச்சூழ்நிலையில், வரும் நவம்பர் 21-இல் தென்கிழக்கு வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை துறை அறிவித்துள்ளது. இது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய குறைவான வாய்ப்பே உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
A new low pressure area is likely to form on November 21st